ஜனாதிபதியின் பொறுமையை உதாசீனப்படுத்தியதன் விளைவே இது என்கிறார் ரன்ஜித் சியம்பலாப்பிட்டிய

Published By: Vishnu

07 Nov, 2018 | 08:01 PM
image

(ஆர்.யசி)

தேசிய அரசாங்கத்தை வீழ்த்தியதும், ஐக்கிய தேசியக் கட்சியை நிராகரித்ததும் நல்லாட்சியில் செய்யத துரோகமாக கருத வேண்டாம். நல்லாட்சியை ஆதரித்த மக்களுக்காக எடுக்கப்பட்ட தீர்மானமே இதுவென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூறுகின்றது. ஜனாதிபதியின் பொறுமையை ஐக்கிய தேசியக் கட்சி உதாசீனப்படுத்தியதன் விளைவே இந்த தீர்மானம் எனவும் அக்கட்சி கூறியது. 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் இந்தக் கருத்தினை முன்வைத்தனர்.  

செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் ரன்ஜித் சியம்பலாப்பிட்டிய கருத்து தெரிவிக்கையில், 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவுபடும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மஹிந்த ராஜபக் ஷவும் பிளவுபடுவார்கள் என கூறப்பட்டு வந்த போதிலும் இப்போதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒன்றிணைந்துவிட்டது. 

பெரும்பான்மை உறுப்பினர்களை உருவாக்கிவிட்டோம். கட்சியை இணைப்பது கட்சியின் ஆரோக்கியம் மட்டும் அல்லாது இந்த நாட்டின் தேவைக்காகவே நாம் ஒன்றிணைந்துள்ளோம். அவசியமான நேரத்தில் இவ்வாறான ஒரு மாற்றம் வேண்டும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. 

குறிப்பாக நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சி கண்டுள்ளது, வாழ்வாதார நிலைமைகள் மோசமானதாகிவிட்டது. மத்திய வங்கி ஊழல் இந்த நாட்டின் பொருளாதாரத்தை பாரிய அளவில் வீழ்த்திவிட்டது. அதையும் தாண்டி நாட்டின் ஜனாதிபதியையே கொலை செய்து அந்த இடத்தை அடைய ஐக்கிய தேசியக் கட்சி செய்த சூழ்சிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  

இவ்வாறான நிலையில் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பது நாட்டினை மேலும் மோசமான நிலைமைக்கு கொண்டுசெல்லும். ஆகவே தான் ஜனாதிபதி உரிய நேரத்தில் சரியான தீர்மானம் எடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00