மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் டில்சானின் ஆட்டமிழப்பு மற்றும் சந்திமாலின் பிடியெடுப்பு தொடர்பில் மஹேல ஜயவர்தன மற்றும் இயன் செப்பல் ஆகியோர் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
நேற்றைய போட்டியில் 15 ஓவர்கள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 94 ஓட்டங்களை பெற்றிருந்தது. களத்தில் ரசல் நான்கு ஓட்டங்களுடனும் பிளெட்சர் 71 ஓட்டங்களுடனும் இருந்தனர்.
இதன்போது 16 ஓவரை துஷ்மிந்த சமிர வீசினார். ஓவரின் முதல் பந்தை பிளெட்சர் எதிர்கொண்ட பந்து மட்டையில் பட்டு சந்திமாலின் கைகளுக்கு சென்றது. அந்த பிடியெடுப்பில் சந்தேகம் நிலவ மூன்றாவது நடுவருக்கு விண்ணப்பிக்கப்பட்டது.
பந்து நேரடியாக சந்திமாலின் கைகளுக்குள்ளே சென்றது. எனினும் மூன்றாவது நடுவராக இருந்த சைமன் பிரை ஆட்டமிழப்பை வழங்கவில்லை.
இதனை இயன் செப்பல் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதாவது களத்தில் உள்ள நடுவர்களால் இந்த பிடியெடுப்பு தொடர்பில் தீரமானம் எடுப்பது கடினம். எனினும் மூன்றாவது நடுவருக்கு இலகுவாக தீர்மானத்தை எடுக்கலாம்;. மேலும் டி.வி. தொழினுட்பம் தொடர்பில் அறிவும் அவசியம் என்பதோடு பந்து பவுண்ஸ் ஆகுவதும் தொடர்பிலும் பொதுவான அறிவு வேண்டும். இந்த தீர்மானம் நடுவரின் அசமந்த போக்கினாலே வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இதேபோன்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டில்சான் எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். பிரைத்வைட் வீசிய 3.1 ஓவரில் டில்சான் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இந்த ஆட்டமிழப்பு மூன்றாவது நடுவர் ஊடாக பார்க்கப்பட்ட போது ஆட்டமிழப்பு இல்லை. எனினும் கள நடுவரால் முன்னதாகவே ஆட்டமிழப்பு வழங்கப்பட்டதால் டில்சான் அரங்குக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த ஆட்டமிழப்பு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள மஹேல ஜயவர்தன,
டில்சானுக்கு எதிரான ஆட்டமிழப்பை ஏற்றுகொள்ள முடியாது. இந்த ஆட்டமிழப்பையடுத்து இலங்கை அணி தொடர்ச்சியாக தனது விக்கெட்டுகளை இழந்தது. இதனாலேயே இலங்கை அணி தோல்வியை தழுவியது எனவும் கூறலாம். டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் மீள் பரிசோதனை இருக்கும் போது ஏன் இருபது-20 போட்டிகளில் இந்த முறையை நடைமுறைப்படுத்த முடியாது. இருபது-20 தொடர் என்பது முக்கியமான ஒன்றாகும். கடந்த காலங்களில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டிகளில் டில்சான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தால். மேலும் நேற்றை போட்டியின் ஆரம்பத்தில் சிறப்பான தொடக்கத்தை பெற்று கொடுத்தார். இந்த ஆட்டமிழப்பையடுத்து அணி வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கலாம். எனவே இருபது-20 போட்டி கட்டாயம் மீள்பரிசோதனை திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார். மேலும் தான் இந்த தீர்மானத்தால் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை இருபது-20 போட்டிகளில் கட்டாயம் மீள்பரிசோனை திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் இயன் செப்பலும் வலியுறுத்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM