சீரற்ற காலநிலையால் மட்டு.வில் 249 குடும்பங்களைச் சேர்ந்த 876 பேர் பாதிப்பு

Published By: Vishnu

07 Nov, 2018 | 09:58 AM
image

சீரற்ற காலநிலையினால் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 249 குடும்பங்களைச் சேர்ந்த 876 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 179 குடும்பங்கள் 656 பேர் இடம்பெயர்ந்து 3 பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். 

இதேவேளை கொழும்புக்கான புகையிரத சேவை மற்றும் பல பிரதேசங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாக இடர் அனர்த்த முகாமைத்துவ மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ.சி முகமட் றியாஸ் தெரிவித்தார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் இன்று செவ்வாய்கிழமை காலை 8.30 மணிவரை 124.3 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளது அதேவேளை இன்று செவ்வாய்க்கிழமை  காலையில் இருந்து மாலை வரை 60 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி  பதிவாகியுள்ளது.

திங்கட்கிழமை ஆரம்பித்து தொடர்ந்து பெய்துவரும்  மழையினால் எற்பட்டுள்ள வெள்ளத்தினால் வாகரை , கோறளைப்பற்று , கோறளைப்பற்று மத்தி ஆகிய 3 செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 249 குடும்பங்களைச் சேர்ந்த 876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்ட 179 குடும்பங்கள் 656 பேர் இடம்பெயர்ந்து வாகரை வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களிலுள்ள  3 பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.   பிரதேச செயலாளர் ஊடாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றது. 

இதேவேளை வெள்ளத்தினால் மட்டக்களப்பு  புனானை புகையிரத நிலையத்துக்கு அருகில் புகையிரத தண்டவாளம் சேதமடைந்துள்ளதையடுத்து புகையிரத போக்குவரத்து சேவை துண்டிக்கப்பட்டுள்ளதுடன் பாதிப்படைந்த தண்டவாளத்தை சீர் செய்யும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

கிரான் பிரதேசத்தில் கிரான் பிரதேசத்தில் உள்ளக சகல போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன்  பிரதேச செயலகம் மற்றும் பிரம்படித் தீவுக்க செல்லகின்ற பாதையும் துண்டக்கப்பட்டுள்ளதுடன் அந்த பிரதேசத்தில் மக்களை மீட்க மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கமைய படகு சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உன்னிச்சையில் 6 அங்குல உயரத்திற்கு 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் ரூபம் குளத்தில் இருந்து 4 அடி உயரத்துக்கு வான்கதவு திறக்கப்பட்டுள்ளது இருந்தபோதும் எந்தவிதமான பாதிப்புக்களம் இல்லை.

 ஆனால் தொடர்ச்சியாக மழை வீழ்ச்சி இடம்பெறுமானால் மாவட்டத்திலே அதிகளவான பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கின்றதுடன் சகல ஏல்லா பிரதேச செயலகங்கள் மற்றும் திணைக்களங்களும் முன் ஆயத்தமாக இருக்கின்றதுடன். தொண்டர் அமைப்புக்களும் முடக்கி விடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08