மேற்கிந்திய அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா பெற்றுக் கொண்ட அதிரடியான சதத்தினால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 195 ஓட்டங்களை பெற்றது.
உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இடம்பெற்று வரும் இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு இந்திய அணியை பணித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட இந்திய அணி சார்பில் தவான் மற்றும் ரோகித் ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களமிறங்கினர்.
இவர்கள் இருவரும் இணைந்து மேற்கிந்திய அணிப் பந்து வீச்சாளர்களின் பந்துகளை அனைத்து திசையிலும் அதிரடியாக அடித்தாட அணியின் ஓட்ட எண்ணிக்கை விக்கெட் இழப்பின்றி வேகமாக அதிகரித்தது.
முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 83 ஓட்டங்களை அணி பெற்றது. அணித் தலைவர் ரோகித் சர்மா 42 ஓட்டத்துடனும், தவான் 35 ஓட்டத்துடனும் அதிரடி காட்டி வந்தனர்.
இந் நிலையில் 12.1 ஆவது ஓவரில் அணித் தலைவர் ரோகித் சர்மா 38 பந்துகளை எதிர்கொண்டு 3 ஆறு ஓட்டங்கள், 3 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்களாக சர்வதேச இருபதுக்கு 20 அரங்கில் 16 ஆவது அரை சதத்தை பூர்த்தி செய்ய அதே ஓவரின் அடுத்த பந்தில் இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை 100 ஐ கடந்தது.
எனினும் 13 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் தவான் 41 பந்துகளை எதிர்கொண்டு 3 நான்கு ஓட்டம் உள்ளடங்களாக 43 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினர். இவரின் வெளியேற்றத்தையடுத்து களமிறங்கிய ரிஷாத் பந்தும் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காமல் 5 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய கே.எல்.ராகுலுடன் ரோகித் சர்மா கைகோர்த்தாடி வர ரோகித் சர்மா 17 ஆவது ஓவரின் இரண்டாவது பந்தில் மேலும் ஒரு 6 ஓட்டத்தை விளாச அணியின் ஓட்ட எண்ணிக்கை 150 ஐ தாண்டியது.
தீபாவளியை முன்னிட்டு போட்டியில் தொடர்ந்தும் வான வேடிக்ககை காட்டிய ரோகித் சர்மா 19. 3 ஆவது ஓவரில் 58 பந்துகளுக்கு 8 நான்கு ஓட்டங்கள் 6 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்களாக இருபதுக்கு 20 அரசங்களில் நான்காவது சதத்தை பூர்த்தி செய்தார்.
இறுதியாக இந்திய அணி 20 ஓவர்களின் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 195 ஓட்டங்களை குவித்தது. இதன் மூலம் மேற்கிந்திய அணிக்கு வெற்றியிலக்காக 196 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.
ரோகித் சர்மா 111 ஓட்டத்துடனும், ராகுல் 26 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
மேற்கிந்திய அணி சார்பில் பந்து வீச்சில் உஷேன் தோமஸ் மற்றும் கீமோ பவுல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM