(நா.தனுஜா)
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான மனுஷ நாணயக்கார அப்பதவியிருந்து இராஜினாமா செய்து, மீளவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிப்பதாகவும், ஜனநாயக விரோத செயற்பாடுகளை முறியடிப்பதற்கு எம்மோடு இணைந்து எமக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவித்துள்ளமையானது அரசியலமைப்பினையும், ஜனநாயகத்தையும் குழிதோண்டிப் புதைக்கும் செயற்பாடுகளுக்கு எதிராக நாம் மேற்கொண்டுள்ள போராட்டத்திற்கு கிடைத்துள்ள வெற்றியாகும் என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்ததுடன், மனுஷ நாணயக்காரவைப் போன்று இன்னும் 15 பேர் வரையில் எம்மோடு இணைந்து கொள்வதாக உறுதியளித்துள்ளனர் என அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதனைத் தொடர்ந்து பதவியேற்ற புதிய அமைச்சரவையில் ஜக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மனுஷ நாணயக்கார எம்.பி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
தத்தமது கட்சிகளின் பெரும்பான்மையினை நிரூபிப்பதற்கான கட்சித்தாவல்கள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், நேற்றையதினம் மனுஷ நாணயக்கார புதிய அரசாங்கத்தில் தான் பெற்றுக் கொண்ட அமைச்சுப்பதவியினை இராஜினாமா செய்துள்ளதுடன், மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதாகவும், ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படுவதற்கு தயாராக உள்ளதாகவும் அறிவித்துள்ளார். இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியினால் இன்று செவ்வாய்கிழமை அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அஜித் பி பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM