சர்வதேச சமூகம், சிவில் சமூகத்திடம் விமல் கேட்கும் கேள்வி

Published By: Vishnu

06 Nov, 2018 | 01:38 PM
image

(எம்.மனோசித்ரா)

மாகாண சபைத் தேர்தல்கள் காலம் தாழ்த்தப்பட்டுக் கொண்டு வருகின்றன என்பது மேற்குலக நாடுகள் உட்பட அனைவரும் அறிந்த விடயமாகும். எனினும் தற்போது அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாகவும், ஜனநாயகத்தை பாதுகாப்பதாகவும் கூறி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கும் சிவில் அமைப்புக்கள், மக்கள் விடுதலை முன்னணி, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஜனாதிபதியை விமர்சிக்கும் சர்வதேச நாடுகள் ஏன் மாகாண சபை தேர்தல் காலம் தாழ்த்தப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பினார். 

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார். 

அங்கு தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

சபாநாயகர் கருஜயசூரிய இவ்வாறு பக்க சார்பாக தொடர்ந்தும் செயற்படுவாராக இருந்தால் இறுதியில் விவசாயத்திற்கு செல்ல வேண்டிய நிலைமையே ஏற்படும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காண்பிக்குமாறு அவர் தெரிவித்து வருகின்றார். பிரதமர் மஹிந்தராஜபக்ஷ தன்னுடைய பெரும்பான்மையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மாத்திரம் காண்பித்தால் போதுமானது. சபாநாயகருக்கு காண்பிக்க வேண்டிய அவசியமில்லை. 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 113 பெரும்பாண்மை உறுதிப்பட்டுள்ளது. அடுத்த பாராளுமன்ற அமர்வு கூடும் முன்னர் அது 125 ஆக அதிகரிக்கும்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53