(ஆர்.விதுஷா)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன - மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சி அமைத்தமையை இட்டு மகிழ்ச்சி அடைகின்றேன் எனத் தெரிவித்த திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராக பதவியேற்றிருக்கும் தயாசிறி ஜயசேகர, தான் கடமை ஏற்றிருக்கும் திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சினூடாக நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த தேசிய தொழிற்தகைமையை பெற்றுக்கொடுப்பதன் மூலம் நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுட்ப அறிவை பெற்றுக்கொடுக்கும் வகையில செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அமைச்சர் தயாசிறி ஜயசேகர கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வானது திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சில் இன்று இடம்பெற்றது.
அதனை அடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன - மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சி அமைத்தமையை இட்டு மகிழ்ச்சி அடைகின்றேன் .
அத்துடன், நாட்டின் தலை சிறந்த தேசிய தொழிற்தகைமை மற்றும் தொழில்நுட்ப அறிவுடைய சந்ததியினரை உருவாக்கும் வகையில் திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராக கடமையேற்றதை இட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.
நாட்டின் இளம் சந்ததியினருக்கு சிறந்த வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்தகைமை என்பவற்றை பெற்றுக்கொடுப்பதற்கான புதிய செயற்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம். அதனூடாக பாடசாலையை விட்டு வெளியேறிய மற்றும் கபொத சாதாரண தரம் மற்றும் க.பொ.தா .உயர்தர பரீட்சைகளில் சித்தி பெறாத மாணவர்களுக்கும் தொழிற்பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளதுடன் அதன் மூலம் சிறந்த வேலைவாய்ப்புக்களை பெற்று சமூகத்தில் சிறந்த சந்ததியினராக திகழ வழிவகுப்பதற்காகவே இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM