மைத்திரி -  மஹிந்த அரசாங்கம் ஆட்சியமைத்தமை மகிழ்ச்சி - தயாசிறி

Published By: Vishnu

05 Nov, 2018 | 04:38 PM
image

(ஆர்.விதுஷா)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன -  மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சி அமைத்தமையை இட்டு மகிழ்ச்சி அடைகின்றேன் எனத் தெரிவித்த  திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராக பதவியேற்றிருக்கும் தயாசிறி ஜயசேகர, தான் கடமை ஏற்றிருக்கும்  திறன்கள் அபிவிருத்தி மற்றும்  தொழிற்பயிற்சி அமைச்சினூடாக நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த  தேசிய தொழிற்தகைமையை பெற்றுக்கொடுப்பதன் மூலம்  நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுட்ப அறிவை பெற்றுக்கொடுக்கும் வகையில செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தார். 

அமைச்சர் தயாசிறி ஜயசேகர கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வானது திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி  அமைச்சில் இன்று இடம்பெற்றது. 

அதனை அடுத்து  ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன -  மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சி அமைத்தமையை இட்டு மகிழ்ச்சி அடைகின்றேன் . 

அத்துடன், நாட்டின் தலை சிறந்த  தேசிய தொழிற்தகைமை மற்றும்  தொழில்நுட்ப அறிவுடைய   சந்ததியினரை  உருவாக்கும்   வகையில்  திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராக கடமையேற்றதை இட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.

நாட்டின் இளம் சந்ததியினருக்கு  சிறந்த  வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்தகைமை என்பவற்றை பெற்றுக்கொடுப்பதற்கான புதிய செயற்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம். அதனூடாக  பாடசாலையை விட்டு வெளியேறிய மற்றும் கபொத சாதாரண தரம் மற்றும் க.பொ.தா .உயர்தர பரீட்சைகளில் சித்தி பெறாத மாணவர்களுக்கும்  தொழிற்பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளதுடன் அதன்  மூலம்  சிறந்த  வேலைவாய்ப்புக்களை பெற்று சமூகத்தில் சிறந்த சந்ததியினராக திகழ வழிவகுப்பதற்காகவே இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47