இந்தியா, மெரினா கடற்கரை நீச்சல் குளம் அருகே காலை நடைபயிற்சி சென்ற நபர்கள் மணலில் பெண்ணின் உடல் இருப்பதையும், அந்த சடலம் மீது மணல் கொட்டப்பட்டு அரைகுரையாக மூடப்பட்டு இருந்ததையும் பார்த்துள்ளனர்.
இருப்பினும் அந்த பெண்ணின் மூக்கில் இரத்தம் வழிந்து கொண்டு இருந்தது. உடலெங்கும் காயங்கள், முகம் அதிகமாக தாக்கப்பட்டுள்ளது. காயங்களிலிருந்து இரத்தம் வந்து கொண்டே இருந்தது.
அதிர்ச்சி அடைந்து பொதுமக்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த பொலிசார் உடலை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டனர். உயிரிழந்ததாக கூறப்படும் பெண்ணுக்கு 35 வயது இருக்கும் என கூறப்படுகிறது.
அந்த பெண்ணின் அருகில் நான்கு ஜோடி செருப்புகள் கிடந்தன. கூடவே மதுபாட்டில்களும் அந்த பெண்ணின் செல்போனும் இருந்தது.
அந்த செல்போனில் பதிவாகி இருந்த நம்பர்களை கொண்டு விசாரணை நடைபெறுகிறது.
இரவில் உல்லாசமாக இருக்க கடற்கரைக்கு அந்த பெண்ணை யாரேனும் தனியாக அழைத்து வந்திருக்கலாம் என்றும் ஒன்றாக மது அருந்திய இருவருக்குள் தகராறு ஏற்பட்டு அதனால் அந்த பெண்ணை நபர் கொலை செய்திருக்கலாம் என்றும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
தாக்கப்பட்ட பெண் இறந்துவிடவும் பதட்டத்தில் அரைகுறை மண்ணை போட்டு மூடியதுடன், தனது செருப்பையும் அங்கேயே விட்டு கொலையாளி தப்பி சென்றிருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM