ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் ஆகியோரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் இரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீனை சந்திப்புக்கு அழைத்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குமாறு அவர் கோரியதாக தெரிகின்றது.
இதேபோன்றே நேற்றுக் காலை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப்ஹக்கீம் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போதும் அரசாங்கத்திற்க காங்கிரஸ் ஆதரவு வழங்கவேண்டும் என்றும் அனைவரும் ஒன்றிணைந்து ஆட்சியினை கொண்டு செல்ல வேண்டும் என்றும் ஜனாதிபதி கோரியதாக தெரிகின்றது.
இந்த சந்திப்பின்போது ஜனாதிபதியின் செயற்பாடுகள் தொடர்பில் ஹக்கீம் அதிருப்தி தெரிவித்துள்ளதுடன் கட்சிகளை பிளவுபடுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சிதாவச் செய்யும் நடவடிக்கைகள் தவறானவை என்றும் சுட்டிக்காட்டியதாக தெரிகின்றது.
ஜனாதிபதியுடன் நேற்று முன்தினம் இரவு சந்தித்துப் பேசிய ரிஷாத் பதியுதீன் உடனடியாகவே அலரிமாளிகைக்கு சென் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த கலந்துரையாடியிருந்தார். இதேபோன்றே ரவூப் ஹக்கீமும் ஜனாதிபதியுடனான சந்திப்பை அடுத்து ரணிலை சந்தித்து பேசியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM