சிலாபம், முகுணுவடவன பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் முகுணுவடவன பகுதியில் வசிக்கும் 22 வயதுடையவர் ஆவார்.
உயிரிழந்தவரின் தந்தையும் கொலையாளியும் நேற்றிரவு ஒன்றாக மது அருந்தியுள்ளனர், பின் இருவருக்குமிடையிலான கருத்து முரண்பாட்டினால் மரணமடைந்தவரின் தந்தையை கொலையாளி தாக்கியுள்ளார்.
தந்தையை தாக்கியவருடன் இடம்பெற்ற வாக்குவதம் கைகலப்பாக மாறியமையினாலேயே குறித்து நபர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை எனத் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM