வவுனியா ஓமந்தை பகுதியில் காரில் கேரளா கஞ்சாவினை கடத்திச்சென்ற மூவரை ஓமந்தை பொலிஸார் இன்று பகல் கைது செய்துள்ளனர்.
ஓமந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர அபயவிக்கிரமவின் ஆலோசனையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் பொன்சேகாவின் நெறிப்படுத்தலில் ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுரேஷ் த டிசில்வா தலைமையில் ஏ 9 வீதியில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது யாழ்ப்பாணத்திலிருந்து சம்மாந்துறை நோக்கி காரில் 1 கிலோ 126கிராம் கேரளா கஞ்சாவினை எடுத்துச்சென்றவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மூவரும் சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 24, 28, 29 வயதுடையவர்கள் ஆவர்.
மூவரையும் அவர்கள் பயணித்த காரையும் பொலிஸார் தடுப்பு காவலில் வைத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கையும் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM