உலகக் கிண்ண இருபதுக்கு 20 போட்டிகளில், நேற்று இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி துடுப்பாட களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்ப வீரர்களான தினேஷ் சந்திமால் 16 ஓட்டங்களுடனும், டில்ஷான் 12 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.
இதன்பின்னர் அடுத்தடுத்து களமிறங்கியவர்களும் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க நிதானமாக ஆடிய மெத்தியூஸ் 20 ஓட்டங்களையும், திஸர பெரேரா 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
20 ஓவர் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 122 ஓட்டங்களைப் பெற்றது. 123 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன், மேற்கிந்திய தீவுகள் களமிறங்கியது.
அந்த அணி சார்பில் அதிரடியாக ஆடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அன்றி பிளட்சர் (Andre Fletcher) இறுதிவரை ஆட்டமிழக்காது களத்தில் இருந்து 84 ஓட்டங்களை விளாசினார். மேற்கிந்திய தீவுகள் 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து, 127 ஓட்டங்களை விளாசியது.
இதற்கமைய 7 விக்கெட்டுக்களால் மேற்கிந்திய தீவுகள் வெற்றி வாகை சூடியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM