இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையினால் வவுனியா புதிய பஸ் நிலையம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு சம்பந்தமான தீர்ப்பு நேற்று வவுனியா மாவட்ட நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.கீழ் குறிப்பிட்ட நடைமுறை அமுலுக்கு வருகின்றது.
பரீட்சார்த்த நடவடிக்கையாக ஒரே இடத்தில் இருந்து இ.போ.ச வும் தனியாரும் இணைந்த நேர அட்டவணையை நடைமுறைபடுத்தி ஓட வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் சகல பஸ்கள் வவுனியா புதிய பஸ் நிலையத்தில் உள்நுழைந்து செல்லலாம்.
வெளி மாகாணத்தில் இருந்து வவுனியா ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் பஸ்கள் புதிய பேரூந்து நிலையத்துக்குள் வராது நேராக செல்ல வேண்டும் என்று தற்காலிக கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை இரவு 9.00 மணியில் இருந்து அதிகாலை 03.30 மணிவரை வவுனியா புதிய பஸ் நிலையத்துக்குள் வெளி மாகாணங்களில் இருந்து வவுனியா ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் பஸ்கள் உள் நுழைந்து செல்லலாம்.
இதனை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நடை முறைப்படுத்த வேண்டும் எனவும் நீதிமன்ற உத்தரவை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நீதிமன்ற நீதவான் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM