எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் தமது கோரிக்கையை நிறைவேற்றாவிடில் 19ஆம் திகதியிலிருந்து அனைத்து நகரசபை ஊழியர்களையும் இணைத்துக்கொண்டு வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஊழியர்களின் பொதுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய அரச பொது ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் பல்வேறுபட்ட நிலைமைகளில் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதில் முக்கிய விடயமாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சபையின் அமர்வின்போது அட்டவணைப்படுத்தப்படாத ஊழியர்கள் தொடர்பான சம்பளப்பிரச்சினை நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ளது. அரச நிர்வாகத்தினர் சம்பளம் சீர்செய்யப்பட்டமை சரியென சொல்கின்றார்கள்.
தொழிலாளர்கள் சார்பாக இச்சம்பளம் சீர் செய்யப்பட்டதை பிழை எனக்கூறுகின்றார்கள்.
எனவே இச்சம்பளப்பிரச்சினையை தீர்ப்பதற்கு வேறு திணைக்களங்களைச் சேர்ந்த பதவி நிலை உத்தியோகத்தர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குழு ஒன்று வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஊடாக அமைக்கப்பட்டு தீர்வு காண்பதென்று சபையால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இத்தீர்மானத்தை முன்மொழிந்தவர் நகரசபை உறுப்பினர் க. சந்திரகுலசிங்கம் வழிமொழிந்தவர் நகரசபை உறுப்பினர் க. சுமந்திரன் எனவே இத்தீர்மானங்கள் உறுப்பினர்களின் அனுமதியுடன் தீர்மானிக்கப்பட்டு கடந்த ஆறு மாதங்கள் கடந்த நிலையிலும் தமது சம்பளப்பிரச்சினைக்குத்தீர்வு காணப்படவில்லை.
என்பதுடன் ஊழியர்களின் மலசலகூடம், ஓய்வு அறை அமைத்தல், தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட காவல் கடமைகள் நீக்குதல், உள்ளக வெற்றிடம் உடனடியாக நிரப்பப்படவேண்டும், நகரசபையில் மூன்று இலட்சத்திற்கு பெறுமதியாக மரங்கள் களவாடப்பட்டது. இன்று வரையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை போன்ற ஜந்து கோரிக்கைகளை முன்வைத்து இவ்வேலை நிறுத்தப்போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக பொதுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேசிய அரச பொது ஊழியர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்கம் இவ்வேலை நிறுத்தப்போராட்டத்தில் தமது சங்க உறுப்பினர்கள் ஈடுபடப்போவதில்லை என சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரும் நகரசபை ஊழியருமான இராமு சூரியகுமார் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நகரசபைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் குறித்து நகரசபை உப தவிசாளர் சு.குமாரசாமியிடம் தொடர்புகொண்டபோது,
சபையின் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுபோல் என்னுடன் சேர்த்து ஐவர் கொண்ட குழுவினர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தீபாவளியின் பின்னர் யாழப்பாணத்திலுள்ள உள்ளுராட்சி ஆணையாளரிடம் சென்று குறித்த விடயங்களை ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM