நாட்டில் ஜனநாயகத்திற்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.இதனால் பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு இலங்கை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இலங்கை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இணைந்து இன்று அலரிமாளிகையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
குறித்த சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
இதில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி, ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான பிரச்சினை கிடையாது.
அல்லது ஐக்கிய தேசியக் கட்சிக்கும்,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பிரச்சினை கிடையாது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினை ஜனநாயகப் பிரச்சினை.
மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 5 ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளதாக தன்னிடம் ஜனாதிபதி தெரிவித்ததாக நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
ஆனால் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 7 ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு தெரிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
எமக்கு 5 ஆம் திகதியோ அல்லது 7 ஆம் திகதியோ பாராளுமன்றத்தைக் கூட்டவேண்டிய தேவையில்லை. பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டி நாட்டில் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை உடனடியாக தீர்க்குமாறு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM