சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து, மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் ஆயுர்வேத மருந்து விற்பனையில் ஈடுபட்ட இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 12 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 18ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி கடற்கரையிலுள்ள தனியார் தங்குமிட விடுதியில் வைத்து பொலிசாரினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து நேற்று சனிக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி வினோபா இந்திரன் முன்னிலையில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 23 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இவர்களிடம் இருந்து பொலிசாரினால் கைப்பற்றப்பட்ட இலேகியம், எண்ணெய், தூள் உள்ளிட்ட பெறுமதியான சட்டவிரோத ஆயுர்வேத மருந்துகளை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறும் நீதவான் தெரிவித்துள்ளார். 40 வயதிற்கு மேற்பட்ட ஐந்து பெண்களும், ஏழு ஆண்களுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(பழுலுல்லாஹ் பர்ஹான்;)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM