மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் இந்திய அணி மேற்கிந்திய அணியை இலகுவாக வீழத்தி தொடரை 3:1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான இப் போட்டி இன்று பிற்பகல் 1:30 மக்கு திருவானந்தபுரத்தில் ஆரம்பனது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதற்கமைவாக முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணி இந்திய அணியின் பந்து வீச்சாளர்களின் பந்துகளுக்கு நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காது. 31.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 104 ஓட்டத்தை பெற்றது.
105 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய சார்பில் தவான் மற்றும் ரோகித் சர்மா ஆரம்ப வீரர்களாக களமிறங்கி துடுப்பெடுத்தாட, தாவன் 1.5 ஆவது ஓவரில் 6 ஓட்டத்துடன் உஷேன் தோமஸின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனால் இந்திய அணி 6 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டினை பறிகொடுத்தது. எனினும் அடுத்து களமிறங்கிய அணித் தலைவர் விராட் கோலியுடன் இணைந்து ரோகித் சர்மா மேற்கிந்திய அணிப் பந்து வீச்சாளர்களின் பந்துகளை அடித்து நொறுக்க, இந்திய அணி 9.3 ஆவது ஓவரில் 50 ஓட்டங்களை கடந்தது. ஆடுகளத்தில் ரோகித் சர்மா 20 ஓட்டத்துடனும், விராட் கோலி 23 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.
தொடர்ந்தும் போட்டியில் அதிரடியாக ஆட்டம் காட்டிய ரோகித் சர்மா 11 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் 48 பந்துகளை எதிர்கொண்டு 3 ஆறு ஓட்டங்கள், 5 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அரைசதம் கடக்க 14.2 ஓவரில் அணி 100 ஓட்டங்களை கடந்ததுடன் 14.5 ஆவது ஓவரில் மேற்கிந்திய அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.
ஆடுகளத்தில் ரோகித் சர்மாக 63 ஓட்டத்துடனும், விராட் கோலி 33 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
இதன் மூலம் இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3:1 என்ற கணக்கில் கைப்பற்றி கிண்ணத்தை கைப்பற்றியது.
போட்டியின் ஆட்டநாயகனாக 34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றிய ஜடேஜாவும், தொடரின் ஆட்ட நாயகனாக ரோகித் சர்மாவும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM