கைதுசெய்யப்பட்ட 15 மாணவர்களுக்கும் பிணை

Published By: Vishnu

01 Nov, 2018 | 04:20 PM
image

தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாக செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்த, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டிகளின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 15 மாணவர்களையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் செல்ல அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பல்கலைக்கழக வளாக நிர்வாகக் கட்டடத்தை இரு வாரங்களாக தொழில்நுட்பவியல் பீடத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் ஆக்கிரமித்து பல்கலைக்கழக நிர்வாகச் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்து வருவதாக பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொலிஸாரால் இம் மாணவர்களுக்கெதிராக அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இம் மாணவர்களை நிர்வாகக் கட்டடத்திலிருந்து வெளியேறுமாறு நீதிமன்றினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தும், இதனை அவமதித்த குற்றச்சாட்டின் பேரிலும் கடந்த வியாழக்கிழமை  இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந் நிலையில் இவர்கள் மீதான வழக்கு இன்று அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே பதில் நீதிபதி கைதுசெய்யப்பட்ட 15 மாணவர்களையும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்ய அனுமதி அளித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22