தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாக செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்த, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டிகளின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 15 மாணவர்களையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் செல்ல அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பல்கலைக்கழக வளாக நிர்வாகக் கட்டடத்தை இரு வாரங்களாக தொழில்நுட்பவியல் பீடத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் ஆக்கிரமித்து பல்கலைக்கழக நிர்வாகச் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்து வருவதாக பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து பொலிஸாரால் இம் மாணவர்களுக்கெதிராக அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
இம் மாணவர்களை நிர்வாகக் கட்டடத்திலிருந்து வெளியேறுமாறு நீதிமன்றினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தும், இதனை அவமதித்த குற்றச்சாட்டின் பேரிலும் கடந்த வியாழக்கிழமை இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந் நிலையில் இவர்கள் மீதான வழக்கு இன்று அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே பதில் நீதிபதி கைதுசெய்யப்பட்ட 15 மாணவர்களையும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்ய அனுமதி அளித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM