ஹொரவ்பத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 11 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹொரவ்பத்தான, வலிமபொத்தானை பகுதியைச் சேர்ந்த இராணுவப் படையில் சிவில் ஊழியராக கடமையாற்றி 48 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரிய வருவதாவது:
சிறுவயதில் வளர்ப்புக்காக எடுத்த பிள்ளை இரண்டாவது திருமண மனைவியுடன் இச்சிறுமி வளர்ந்து வந்தபோது மனைவி கடைக்கு சென்ற வேளை 11 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்டவருடைய மனைவி சிறுவர் மற்றும் பெண்கள் அமைப்பிற்கு வழங்கிய தகவலையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த போது இவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கெப்பிட்டிகொல்லாவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியை அனுராதபுர போதனா வைத்தியசாலை அனுமதித்துள்ளதாகவும் ஹொரவ்பத்தான பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM