“ஜனநாயகத்தை, மக்களுக்காக மக்களால் ஆளப்படுவதே ஜனநாயகம் ”

Published By: Daya

01 Nov, 2018 | 04:49 PM
image

ஆபிரகாம்லிங்கன் அவர்கள் ஜனநாயகத்தை,மக்களுக்காகமக்களால் ஆளப்படுவதே ஜனநாயகம் என பரிந்துரைத்துள்ளார். என்று மூத்த  அரசியல் வாதியும் த.வி.கூட்டணியின் செயலாளருமான வீ. ஆனந்த சங்கரி இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து இலங்கையில் ஜனநாயகம் எவ்வாறு தடம் புரண்டது.

முன் எப்பொழுதும் இல்லாதவாறுமிகவும் குழப்பமானநிலையில் நம்நாடு இருக்கும்போதுநான் இந்த அறிக்கையை விடுவதற்கு நாட்டுமக்களிடம் மன்னிப்புகோருகின்றேன். 60 ஆண்டுகளுக்குமேலாக தீவிர அரசியலில் இருக்கும் மிக மூத்த அரசியல்வாதி என்பதால் சிலவிடயங்கள் பற்றியும் சிலநபர்கள் பற்றியும் எனது கருத்தைவெளிப்படையாகதெரிவிக்கவேண்டிய கடமை எனக்குண்டு. 

ஆபிரகாம்லிங்கன் அவர்கள் ஜனநாயகத்தை,மக்களுக்காகமக்களால் ஆளப்படுவதே ஜனநாயகம் என பரிந்துரைத்துள்ளார். ஜனநாயக ஆட்சி என்றால் பெரும்பான்மையினரின் ஆட்சிஅல்ல. சிறுபான்மையினரின் சம்மதத்துடன் நடப்பதே ஜனநாயகஆட்சியாகும். காலம் காலமாக இலங்கையில் ஜனநாயகஆட்சி நூற்றுக்கு நூறு வீதம் நடந்ததெனநான் கூற வரவில்லை. 

இடைக்கடை சிறியதாகவும்,சிலவேளைகளில் கூடுதலாகவும் ஜனநாயகம் தடம்புரண்டதுண்டு.ஆனால் 2004ஆம் ஆண்டுஏப்ரல் மாதம் 02ஆம் திகதி நடந்த பாராளுமன்றதேர்தலில் தான் ஜனநாயகம் முற்று முழுதாக தடம் புரண்டதாகும்.

இது எம்மக்கள் அநேகருக்குதெரிந்தவிடயமாகும். சிலர் தெரிந்தும் தெரியாததுபோலநடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்தநேரத்தில் புதிதாகதேர்தல் நடத்தப்படவேண்டுமென அனைவரும் கிளர்ச்சி செய்திருக்கவேண்டும். ஆனால் உள்ளூர் வெளிநாட்டுகண்காணிப்புக் குழுக்களின் மறு வாக்கெடுப்புக்கு விடுமாறுவிடப்பட்ட கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

 ஜனநாயகம் நம்நாட்டில் இது போன்றுமுன்பு எப்பொழுதும் சீரழிக்கப்படவில்லை. அந்தநேரத்தில் அன்றைய அரசுக்கு உரிய நடவடிக்கை எடுக்க இருந்தது. குறிப்பிட்ட ஒரு சிலரின் தலையீட்டால் நடைபெறவில்லை.

தென் இலங்கைகட்சிகள் எதுவும் 2004ஆம் ஆண்டுத் தேர்தலில் வடக்கில் கலந்துகொள்ளஅனுமதிக்கப்படவில்லை. வன்முறைக் கொள்கையுடன் இயங்கிய ஒரு குழு,தமிழத் தேசியக் கூட்டமைப்பினரைத் தவிர,வேறுஎந்தக் கட்சிவேட்பாளர்களையும் எதுவிதபிரச்சாரத்திற்கும் ஈடுபடவிடாதுதடுத்தனர்.

 பணம் கொடுத்து பத்திரிக்கை விளம்பரங்கள் போடுவதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை. அத்தேர்தலில் காலையில் தோல்விஅடைந்தவர் மாலையில் வெற்றிபெற்றதாகஅறிவிக்கப்பட்டார். ஆள்மாறாட்ட வாக்களிப்பு உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது.ஒருவேட்பாளர் 120,000 க்கு அதிகமானவாக்குகளைப் பெற்றிருந்தார். 

அதேபோல் பலர் வழக்கத்திற்கு மாறாக அதிகமானவாக்குகளைப் பெற்றனர். இந்தநிலைமை ஏற்பட்டதற்கு முழுப்பொறுப்பையும் திருவாளர்கள் இரா. சம்பந்தனுக்கும் மாவைசேனாதிராசாவுக்கும் ஏற்கவேண்டும். 

அத் தேர்தலில் குழி தோண்டிப் புதைக்கப்பட்ட ஜனநாயகம் இன்றும் புதைக்கப்பட்டேஉள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை கௌரவமாக செய்திருக்கவேண்டியது மிக்ககண்ணியமான முறையில் பதவிகளைத் துறந்திருக்கவேண்டும். ஆனால் அன்று தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்றஉறுப்பினர்கள் 18 பேரும் 1983ஆம் ஆண்டு பாராளுமன்ற காலத்தை சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மேலும் ஆறு ஆண்டுகள் நீடித்ததை ஆட் சேபித்துபதவிகளைதுறந்தசம்பவம் பற்றி குறிப்பிடப்படுவதுபொருத்தமாக இருக்கும். 

2010ஆம் ஆண்டுதேர்தலில் கலந்துகொண்டஅதே குழு 10தொடக்கம் 15 சதவீதவாக்குகளைப் பெற்று 14 ஆசனங்களைக் கைப்பற்றியது.ஆனால் இத்தேர்தலிலும் ஜனநாயகம் தன் முன்னய இடத்திற்கு திரும்பவில்லை. 

இக்காலகட்டத்தில் தான் சிலரின் எண்ணத்தில் 'நல்லாட்சிஅரசு'என்றஎண்ணம் உதித்தது. இதனால் மேலும் பிரபல்யமடைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கே,தேசிய இயக்குநர் சபையிலும் இடம் கிடைத்தது.

 அச்சபைக்கு அமைச்சருக்குரிய அதிகாரத்திலும் பார்க்க கூடுதலான அதிகாரத்தை கொண்டதாகும் எனஅரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. இச்சபையின்அங்கத்துவத்தின் மூலம்தமிழத் தேசியக் கூட்டமைப்பிற்குதேர்தலில் கூடுதலான ஆசனங்கள் கிடைத்தன. 

 குறித்த குழுவில் கௌரவ இரா. சம்பந்தன் அவர்களுக்கும் ஓர் இடம் கிடைத்தமையானது, 2004 ஆம் ஆண்டுதேர்தலில் அவர்கள் இழைத்தகுற்றத்திற்கு தண்டனையாக பாராளுமன்றத்தில் இருந்து நீக்கப்படாமல்,சன்மானம் வழங்கப்பட்டதுபோல் தெரிகிறது. எதிர்க்கட்சித் தலைவர் பதவி அவர்களுக்குமேலும் ஓர் அலங்காரமாகும்.

மேலும் பலவிடயங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பற்றிஎழுதக் கூடியதாக இருந்தும் இங்கே கூறப்பட்டவைமட்டும் அவர்கள் மக்கள் நலன்தவிர்த்து, தமதுதமிழரசுக் கட்சியை வளர்ப்பதிலேயே ஈடுபட்டுள்ளனர் என்பதுதெளிவாகிறது. 

கலங்கியகுட்டையில் மீன் பிடிக்க நான் முயலவில்லை.எனக்கு மிகப் பாதிப்பு ஏற்பட்டமைக்கு பரிகாரமும் தேட முயற்சிக்கவில்லை. எனது ஒரே கவலையாதெனில் 2004ஆம் ஆண்டு தடம் புரண்ட ஜனநாயகம் இன்றும் பழைய நிலைமைக்கு திரும்பாது புதைந்துகிடப்பதே. 

இன்று நடந்திருப்பவை திருவாளர்கள் சம்பந்தன் சேனாதிராசா போன்றோருக்கு பொதுமக்களின் அடிப்படைஉரிமைகளில் விளையாடாதீர்கள் என்ற எச்சரிக்கை ஒலியாகும்.

தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்தை, சம்மந்தப்பட்டவர்கள் பேசித் தீர்த்துக் கொள்ளட்டும்.அதன் முதல் கட்டமாகதமிழ் மக்கள் நன்கறிந்ததமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த மூன்று பிரமுகர்களும்,பாராளுமன்றத்தை விட்டு வெளியேறி பிரச்சினையை அர்ப்பணிப்புடன் செயற்படக் கூடியவர்களின் கைகளில்,தீர்விற்காகவிட்டுவிடவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58