ஜனாதிபதியின் அதிரடி முடிவு : முடிவை அறிவித்தார் மஹிந்த

Published By: Digital Desk 4

01 Nov, 2018 | 12:05 PM
image

ஒத்திவைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற கூட்டத்தொடரை கூட்டவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் தெரிவித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாராளுமன்றத்தை எதிர்வரும் 5 ஆம் திகதி திங்கட்கிழமை கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த 26 ஆம் திகதி புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டதையடுத்து பாராளுமன்ற அமர்வுகளை நவம்பர் மாதம் 16 ஆம் திகதிவரை ஜனாதிபதி ஒத்திவைத்திருந்தார்.

இதையடுத்து நாட்டில் பெரும் அரசியல் நெருக்கடி நிலவி வந்தநிலையில் பாராளுமன்றத்தைக் கூட்டி ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறு அரசியல் கட்சிகள் உட்பட சர்வதேசங்கள் பெரும் அழுந்தங்களை கொடுத்து வந்தன.

இதனையடுத்து நேற்றையதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து நாட்டின் நிலைமை மற்றும் சர்வதேச அழுத்தங்கள் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய எடுத்துரைந்த நிலையில், ஜனாதிபதி, பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் பரிசீலிக்கப்படுமென தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜனாதிபதியால் 16 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள பாராளுன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 5 ஆம் திகதி கூடவுள்ளதாகவும் இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசுன தனக்கு அறிவித்துள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44