ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மையை நிரூபித்து மீண்டும் ஆட்சியமைக்க முயன்றால் நான் பதவி விலகுவேன். பதவி விலகி வீதியில் இறங்கி மஹிந்தவுடன் இணைந்து செயற்பட நான் தயாராகவுள்ளேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்கள் கூட்டம் நேற்று நண்பகல் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,
கடந்த மூன்றரை வருடங்களாக இடம்பெற்ற ஆட்சியில் பெறுமதியில்லாத நிலையிலேயே நான் இருந்தேன். 2015 ஆம் ஆண்டு மஹிந்தவின் ஆட்சியிலிருந்து எவ்வாறு அதிருப்தியுடன் விலகினேனோ அதனைவிட அதிகமான அதிருப்தியுடனேயே தற்போது அரசாங்கத்திலிருந்து வெளியேறியிக்கின்றோம்.
தற்போது புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மையைக் காண்பித்து ஆட்சி அமைக்க முனைந்தால் எனது பதவியிலிருந்து நான் விலகுவேன். ஏனெனில் தவறு என்று கூறி எந்த அரசாங்கத்திலிருந்து வெளியேறினோமோ அந்த அரசாங்கத்துடன் மீண்டும் செயற்படுவது என்பது முடியாத காரியமாகும். அவ்வாறான நிலை ஏற்பட்டால் வீதியில் இறங்கி மஹிந்தவுடன் இணைந்து வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கு நான் தயாராகவே உள்ளேன்.
எனவே மஹிந்தவுடன் இணைந்து கட்சியை முன்கொண்டு செல்ல நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒன்றுசேர்ந்து பணியாற்ற வேண்டும். கடந்த அரசாங்கத்தில் நாம் உரிய மதிப்பின்றியே நடத்தப்பட்டிருக்கின்றோம். இதனால்தான் நாம் புதிய அரசாங்கத்தை அமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது என்றும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM