விண்ணில் தோன்றிய ‘கடவுளின் கை’: நாசா வெளியிட்ட படத்தால் பரபரப்பு..!

Published By: J.G.Stephan

01 Nov, 2018 | 09:32 AM
image

நாசா அனுப்பிய நுக்லியர் ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் தொலைநோக்கி அர்ரே தொலைதூர வானியல் நிகழ்வுகளை படம் பிடித்து புவிக்கு அனுப்பி வருகிறது. அதன்மூலம் கிடைத்த அண்மைய புகைப்படம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது.

அதில் கை போன்ற வடிவில் விண்பொருள் ஒன்று தென்படுகிறது. இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில் ஒரு நட்சத்திர வெடிப்பு ஏற்பட்டு அதன்மூலம் வெளியேறிய மாபெரும் மேக பொருட்கள் கை போன்ற வடிவை உருவாக்கியுள்ளன.

குறிப்பாக உயர் ஆற்றல் எக்ஸ்-கதிர்கள் நீள நிறத்திலும் குறைவான ஆற்றல் கொண்ட எக்ஸ்-கதிர்கள் சிவப்பு மற்றும் பச்சை நிறத்திலும் தெரிவதாக கூறியுள்ளனர்.

இந்த நிகழ்வு ஒருபுறம் அறிவியலின் அதிசயமாக இருந்தாலும் மறுபுறம் சாதாரண மனிதர்கள் அதை ‘கடவுளின் கை’ என்று குறிப்பிட்டு கொண்டாடுகின்றனர்.

என்னதான் அறிவியல், கண்டுபிடிப்புக்கள் வந்தாலும், இறைவன் குறித்த பக்தியும், நம்பிக்கையும் மனிதர்களிடத்தில் துளியளவேனும் மாற்றம் பெறவில்லையென்றே கூறலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right