தோட்ட தொழிலாளர்களின் 1000 சம்பள உயர்வுக்கு வலுசேர்க்கும் முகமாக இன்று கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த அதிபர்கள், ஆசிரியர்கள் இணைந்து தெஹியோவிட்ட நகரில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினை முன்னெடுத்தனர்.
இந்தப் பேரணியில் தெஹியோவிட்ட வலயத்தைச் நேர்ந்த 60 ற்கு மேற்பட்ட பாடசாலைகளில் இருந்து 300 ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இன்று மாலை 3.00 மணி அளவில் தெஹியோவிட்ட எரிப்பொருள் நிரப்பும் நிலைய அருகில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆதரவு பேரணி கோசங்களை எழுப்பிய வண்ணம் தெஹியோவிட்ட நகரின் ஊடாக தெரணியகலை பாதை சந்தி வரை சென்றது.
சுமார் இரண்டு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தினால் கொழும்பு - ஹட்டன் பிரதான விதியில் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்தும் பாதிப்படைந்திருந்தது.
இதன்போது ஆசிரியர்கள், அதிபர்கள் இணைந்து உடனடியாக தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வாக 1000 ருபாவை வழங்கவேண்டும் என்றும் அரசு இதில் உடனடி கவனத்தை செலுத்தவேண்டும் என்றும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பகர சூழ்நிலையில் நாட்டின் பிரதமராக யார வருகிறாரோ அவர் முதலில் எமது மக்களின் பிரச்சினைக்கு திர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM