வெளிநாட்டு இராஜதந்திரிகள் குழுவொன்றிற்கும் சபாநாயகர் கருஜெயசூரியவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆராய்வதற்காகவே வெளிநாட்டு இராஜதந்திரிகள் சபாநாயகரை சந்தித்துள்ளனர்.
ஐநா ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டன் கனடா ஜேர்மனி ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகளே சபாநாயகரை சந்தித்துள்ளனர்.
இலங்கையின் சிவில் சமூகத்தினரையும் சபாநாயகர் சந்தித்துள்ளார்
இரு சந்திப்புகளின் போதும் பாராளுமன்ற அமர்வுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறித்து கவலை வெளியிடப்பட்டதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டி ஜனநாயகத்தை உறுதி செய்யுமாறு வலியுறுத்தப்பட்டதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து கவலை வெளியிட்டுள்ள தூதுவர்கள் தற்போதைய நிலை காரணமாக இலங்கை குறித்து சர்வதேச அளவில் எதிர்மறையான எண்ணம் உருவாகலாம் என எச்சரித்துள்ளனர்
இதேவேளை தூதுவர்களை உடனடியாக இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எதனையும் எடுக்கவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ள சபாநாயகர் நான் இன்று மாலை ஜனாதிபதியை சந்திக்கவுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM