வடக்கு மாகாண முதலமைச்சர் அமைச்சிற்கான செயலாளர், பிரதிப் பிரதம நிதி செயலாளர் ஆகியோருக்கான நியமனம் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயினால் வழங்கி வைக்கப்பட்டது.
வடமாகாண ஆளுநரின் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வின்போதே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண முதலமைச்சர் அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய விஜயலட்சுமி கேதீஸ்வரன் இன்று ஓய்வு பெற்று செல்லும் நிலையில் பதில் செயலாளராக சரஸ்வதி மோகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோன்று வடமாகாண பிரதி பிரதம செயலாளர் நிதிப்பிரிவின் செயலாளராக ஆர்.பத்மநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியினை வகித்து வந்த எஸ்.சந்திரகுமார் பதவி உயர்வு பெற்று மத்திய திறைசேரியில் மேலதிகப் பணிப்பாளர் நாயகமாக சென்றதன் காரணமாக அந்த வெற்றிடத்திற்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிகழ்வில் ஆளுநரின் செயலர் எல்.இளங்கோவன், பிரதம செயலாளர் அ.பத்திநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM