புதிய பிரதமரின் நியமனமானது இந்த நாட்டின் பொருளாதாரத்தினை ஸ்த்திரப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்யும் என்ற நம்பிக்கை இருக்கின்றது என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார ரீதியிலான நெருக்கடியான சூழ் நிலைகள், ஜனாதிபதியை கொலை செய்ய எடுத்த முயற்சிகள் அது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பன போன்ற காரணங்களை வைத்தே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
புதிய பிரதமரின் நியமனமானது இந்த நாட்டின் பொருளாதாரத்தினை ஸ்த்திரப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செயயும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சினைகள் போன்றல்லாமல் சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு இருக்கின்றது அதை செய்வார் என்று நம்புகின்றேன்.
முஸ்லிம் கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவினை வழங்க தீர்மானித்திருந்தாலும் சில வேளைகளில் அந்த தீர்மானத்தினை இன்னும் சில நாட்களில் மாற்றிக் கொள்ளமுடியும். அதனடிப்படையில் முஸ்லிம் கட்சிகளும் புதிய பிரமதமர் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவினை வழங்க அரசாங்கத்தின் பக்கம் வரலாம்.
அடுத்த நவம்பர் மாதம் 16 ஆம் திகதி பாராளுமன்றம் கூடுவதற்கிடையில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் இடம்பெறலாம் அந்த வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் புதிய அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார்கள்.
எம்மிடம் 96 ஆசனங்கள் இருக்கின்றன. இன்னும் 17 ஆசனங்கள் எங்களுக்கு தேவைப்படுகின்றது அதனை எடுத்துக் கொள்வோம் அதற்கான பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. அவ்வாறான ஒரு ஆதரவில்லாமல் ஜனாதிபதி இவ்வாறான ஒரு முயற்சியை எடுத்திருக்க மாட்டார்.
ஆகவே ஐக்கிய தேசியக் கட்சியின் பல பாராளுமன்ற உறுப்பினாகள் புதிய அரசாங்கத்துடன் வந்து இணைந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை உண்டு என மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM