அரசியலமைப்புக்கு முரணாக ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவில் அமைதிப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டில்லியில் அமைந்துள்ள தெற்காசிய பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த பல்கலைக்கழகத்தில் இலங்கையை சேர்ந்த 8 மாணவர்களே கல்வி கற்கின்ற போதும், ஏனைய நாடுகளை சேர்ந்த மாணவர்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒத்திவைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டி இரண்டு பேரில் யாருக்கு பெரும்பான்மை இருக்கின்றது என்பதை ஜனநாயக ரீதியாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றையும் குறித்த மாணவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
100 மாணவர்களுக்கு மேல் கையொப்பமிட்ட கடிதத்தை டில்லியில் உள்ள இலங்கை தூதரகத்தின் பிரதி உயர்ஸ்தானிகரிடம் மாணவர்கள் ஒப்படைத்துள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM