இத்தாலியை தாக்கிய புயலால் 06 பேர் பலி

Published By: Vishnu

30 Oct, 2018 | 05:07 PM
image

இத்தாலியை தாக்கிய புயல் மற்றும் மழை காரணமாக இதுவரை 06 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பிய நாடான இத்தாலியை நேற்று தாக்கிய கடுமையான புயல் காரணமாக அங்கு பலத்த மழை பெய்து வருதுடன் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் புயலினால் சாய்ந்துள்ளது.

இந் நிலையில் இத்தாலி தலைநகர் ரோமில் கார்மீது மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் காரிலிருந்த இரண்டு பேர் உயிரிழந்தனர். அத்துடன் சவோனோ என்ற பகுதியில் பறந்து வந்த மரக்கட்டை தாக்கியதில் ஒரு மூதாட்டி உயிரிழந்துடன் மேலும் இருவர் பலியாகினர். 

இதனால் இதுவரை புயல், மழையினால் உண்டான வெள்ளம் போன்றவற்றில் சிக்குண்டு 06 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் வெனிஸ் நகரில் வீடுகளும், வீதிகளிளும் வெள்ள நீரில் மூழாகியுள்ளது. இதனால் அப் பகுதியில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மழை காரணமாக ஜெனோவா, ரோம், வெனீடோ, வெனிஸ், மெஸ்சினாவில் உள்ள சிலியான் துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08