இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்சவுடன் இராஜதந்திர அரசியல் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு இந்தியா முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக என்டிரீவி தெரிவித்துள்ளது.
மகிந்த ராஜபக்சவின் மீள்வருகையை எதிர்பார்க்காத இந்தியா இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களிற்கு பின்னர் மகிந்தவுடன் தொடர்பை ஏற்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது என என்டிரீவி தெரிவித்துள்ளது.
சிறிசேனவின் நடவடிக்கை காரணமாக மகிந்த ராஜபக்ச மீள அதிகாரத்தை கைப்பற்றியுள்ளமை இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பது குறித்த கவலையை இந்தியாவிற்கு ஏற்படுத்தியுள்ளது என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்திய இராஜதந்திரிகள் மகிந்த ராஜபக்ச தரப்பினருடன் தொடர்புகொண்டுள்ளனர் என தெரிவித்துள்ள புதுடில்லி தகவல்கள் மகிந்த ராஜபக்சவின் நியமனம் அரசமைப்பிற்கு உட்பட்டதாகயிருக்கும் பட்சத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற தயார் என குறிப்பிட்டுள்ளன எனவும் இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்தியாவின் ஆர்எஸ்எஸ் அமைப்பு மகிந்த ராஜபக்ச தரப்பினருடன் தொடர்புகொண்டுள்ளதாகவும் உறவுகளை வலுப்படுத்த முயல்வதாகவும் இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.
இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் சேசாத்திரி சாரி புதிய தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையும் இந்தியாவும் சிறந்த உறவுகளை ஏற்படுத்த பாடுபடும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மாறியுள்ள பூகோள அரசியல் சூழ்நிலைகளில் நாங்கள் எங்கள் தேசிய நலனை பாதுகாப்பதற்கு யதார்த்தபூர்வமாகயிருக்கவேண்டும் வர்த்தகத்தில் ஈடுபடவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM