மின்சாரத்தின் தாக்கம் காரணமாக 2015 ஆம் ஆண்டு 94 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் கூட்டுத்தாபன தொடர்பாடல் பிரி வின் பிரதிப் பணிப்பாளர் வி.விமலாதித்தன் தெரிவித்தார்.
இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மின்சார நுகர்வோரின் உரிமைகளும் கடமைகளும் தொடர்பில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் கருத்தரங்கு கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் இணையப்பிரிவு பிரதிப்பணிப்பாளர் தனுஸ்க உட்பட ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மின்சாரம் பெறும் மக்களின் அடிப்படை உரிமைகள், அவர்கள் ஆற்றவேண்டிய கடமைகள், அவர்கள் பாதிக்கப்படும்போது முறைப்பாடுகள் மேற்கொள்ளும் வழிவகைகள் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது. குறிப்பாக மின்சார விநியோகங்களை பெறுவோர் அதன் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் தொடர்பில் அறிந்திருக்கவேண்டிய தேவைப்பாடுகள் தொடர்பில் வலியுறுத்தப்பட்டது.
இங்கு கருத்து தெரிவித்த பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் கூட்டுத்தாபன தொடர்பாடல் பிரிவின் பிரதிப்பணிப்பாளர் வி.விமலாதித்தன்,
மின்சாரம் தொடர்பில் பொதுமக்கள் மிக வும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். குறிப்பாக வீடுகளில் உள்ள குழந்தைகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் தொடர்பில் அக்கறையுடன் செயற்படவேண்டும்.
பாவனையாளர்கள் மின் பாவனையை பாதுகாப்பான முறையில் இடறுஆழியினை ப்பொருத்தி மேற்கொள்ளவேண்டும்.பாதுகாப்பற்றமுறையில் மின்சாரங்கள் பயன்படுத்தப்படுவதன் காரணமாக மின்தாக்கத்தினால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
2014ஆம் ஆண்டு இலங்கையில் 180பேர் மின்சார தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர்.எனினும் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு மேற்கொண்டுவரும் விழிப்புணர்வு கருத்தரங்குகள் மூலம் இதுகுறைவடைந்துள்ளது. 2015ஆம் ஆண்டு 94 பேர் மின்சாரத்தாக்கதினால் உயிரிழந்துள்ளனர்.
மின்சார தாக்கத்தினால் ஏற்படும் உயிரி ழப்பினை குறைப்பதற்கான நடவடிக்கை களை பொதுப்பயன் பாட்டு ஆணைக்குழு மேற்கொண்டு வருகின்றது. 2020ஆம் ஆண்டு இந்த இழப்பினை நிறுத்தும் வகை யில் செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM