ரோகித், ராயுடு சதம் ; மே.இ.தீவுகளுக்கு இமாலய வெற்றியிலக்கு

Published By: Vishnu

29 Oct, 2018 | 05:29 PM
image

ரோகித் சர்மா மற்றும் அம்பத்திய ராயுடுவின் அதிரடி ஆட்டம் காரணமாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான நான்காவது போட்டியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 377 ஓட்டங்களை பெற்றது.

மும்பையில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திண அணித் தலைவர் விராட் கோலி முதலில்  துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார். அதற்கிணங்க தவான் மற்றும் ரோகித் சர்மா ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கி அதிரடி கட்டி வந்தனர்.

இதனால் இந்திய அணி முதல் 10 ஓவர்களுக்கு எதுவித விக்கெட் இழப்புகளின்றி 59 ஓட்டங்களை பெற்றது எனினும் இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை 71 ஆக இருந்தபோது 11.5 ஆவது ஓவரில் கீமோ போலினுடைய பந்து வீச்சை  எதிர்கொண்ட தவான் 40 பந்துகளில் 4 நான்கு ஓட்டம், 2 ஆறு ஓட்டம் உள்ளடங்களாக 38 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இவரின் ஆட்டமிழப்பையடுத்து களமிறங்கிய அணித் தலைவர் விராட் கோலி ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தாடி வர இந்திய அணி 16.2 ஆவது ஓவரில் 100 ஓட்டங்களை பெற்ற, அதே ஓவரில் நான்காவது பந்தில் விராட் கோலி 16 ஓட்டத்துடன் கேமர் ரோச்சினுடைய பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தொடர்ந்து களமிறங்கிய ராயுடுவுடன் ஜோடி சேர்ந்தாடி வந்த ரோகித் சர்மாக 21.2 ஆவது ஓவரில் 60 பந்துகளை எதிர்கொண்டு 5 நான்கு ஓட்டங்கள், 1 ஆறு ஓட்டம் உள்ளடங்களாக சர்வதேச ஒருநாள் அரங்கில் 37 ஆவது அரை சதத்தை பூர்த்தி செய்ததுடன் தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடி 32 ஆவது ஓவரின் மூன்றாவது பந்தில் 1 நான்கு ஓட்டத்தை விளாசி, மொத்தமாக 98 பந்துகளை எதிர்கொண்டு 13 நான்கு ஓட்டம், 1 ஆறு ஓட்டம் அடங்களாக சர்வதேச ஒருநாள் அரங்கில் 21 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.

மறுமுணையில் அம்பத்திய ராயுடு 51 பந்துகளை எதிர்கொண்டு 5 நான்கு ஓட்டம் 1 ஆறு ஒட்டம் உள்ளடங்களாக அரைசதம் அடித்தார். தொடர்ந்தும் இந்த ஜோடி அதிரடி காட்ட இந்திய அணி 38.4 ஆவது ஓவரில் 2 விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களை பெற்றது.

இந் நிலையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 42 ஆவது ஓவரின் 4 ஆவது பந்தில் ஒரு நான்கு ஓட்டத்தை விளாச அணியின் ஓட்ட எண்ணிக்கை 300 தொட்டதுடன் ரேகித் சர்மா 150 ஓட்டங்களை கடந்தார். 

எனினும் 43.5 ஆவது ஓவரில் ரோகித் சர்மா 137 பந்துகளுக்கு 20 நான்கு ஓட்டம், 4 ஆறு ஓட்டம் உள்ளடங்களாக 162 ஓட்டத்துடன் அஸ்லி நர்ஸ்ஸினுடைய பந்தில் ஆட்டமிழந்து வெளியேற டோனி களம்புகுந்து ராயுடுவுடன் கைகோர்த்தார்.

தொடர்ந்தும் 46.4 ஆவது பந்தில் ராயுடு 80 பந்துகளை எதிர்கொண்டு ஆடுகளத்தில் 8 நான்கு ஓட்டம், 4 ஆறு ஓட்டம் அடங்களாக ஒருநாள் அரங்கில் மூன்றாவது சதத்தை பூர்த்தி செய்து 47 ஆவது ஓவரின் முதல் பந்தில் ரன்அவுட் முறையில் ஆட்டமிழக்க, 48.3 ஆவது ஓவரில் டோனி 23 ஓட்டத்துடனுடன் ஆட்டமிழந்தார்.

இறுதியாக இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 377 ஓட்டங்களை பெற்று, மேற்கிந்திய அணிக்கு வெற்றியிலக்காக 378 ஓட்டங்களை நிர்ணயித்தது.

ஆடுகளத்தில் கேதர் யாதவ் 16 ஓட்டத்துடனும், ஜடேஜா 7 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் மேற்கிந்திய அணி சார்பாக கேமர் ரோச் 2 விக்கெட்டுக்களையும், அஸ்லி நர்ஸ் மற்றும் கீமோ போல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22