தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி அதற்கான ஆதரவினை தெரிவிக்க வேண்டும். இதற்கு ஆதரவு இல்லாது விட்டால் நடுநிலைமை வகிக்கின்ற முடிவினை எடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி எப்போதும் யாருக்கும் விசுவாசமாக இருந்ததில்லை. தனது ஜனாதிபதி பதவியை தக்கவைப்பதற்காக இன்னுமொரு தடவை ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய நிலைமையை தோற்றுவித்துள்ளார்.
இத்தகைய நிலைமை தமிழ் மக்களுக்கு எத்தகைய சாதகத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.
மைத்திரிபால ஆட்சிக்கு வந்த போது பல விடயங்களை கூறினார். குறிப்பாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும். தமிழ்மக்களுடைய தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படும். ஊழல் இல்லாத ஆட்சிமுறைமை உருவாக்கப்படும் ஊழல்வாதிகள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவார்கள் என பல விடயங்களை கூறினார். இதில் எவையுமே நிறைவேற்றப்படவில்லை.
ஆனால் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த இறுதி நிமிடத்திலாவது நெஞ்சை நிமித்தி தங்களுடைய கோரிக்கை என்ன என்பதை தெரிவிப்பதன் ஊடாகத்தான் குறைந்தபட்சம் சர்வதேச சமூகத்திற்கோ எமது மக்களுக்கோ அல்லது இந்தியா போன்ற நாடுகளுக்கோ தெரியப்படுத்த முடியும்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கோ சிறிலங்கா சுதந்திர கட்சிக்கோ இவர்கள் யாருக்குமே தமிழ் மக்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக கிஞ்சித்தும் அக்கறை கிடையாது என்பதை தெளிவுபடுத்துகின்ற காலகட்டமாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM