இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட விமானமொன்று புறப்பட்டு சிறிது நேரத்தில் கடலில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் இருந்து லயன் ஏயார் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் இன்று காலை 6.20 மணியளவில் பங்க்கால் தீவு நோக்கி 188 பயணிகளுடன் புறப்பட்டது.
இந்நிலையில், விமானம் புறப்பட்டு நடுவானில் பறக்கத் தொடங்கிய 13 வது நிமிடத்தில், விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால்ஈ விமானத்தை தேடும் பணியில் அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டனர். 181 பயணிகள் மற்றும் 7 விமான ஊழியர்கள் என மொத்தம் 188 பேர் பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில், லயன் ஏயார் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதை அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் மற்றும் அதிகாரிகள் விரைந்துள்ளனர். விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்களை தேடி வருவதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM