இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தெமட்டகொட பெற்றோலிய வள கூட்டுத்தாபன வளாகத்தினுள் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை கைது செய்யுமாறு கோரி அதன் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
அர்ஜுன ரணதுங்க நேற்று பிற்பகல் பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்தினுள் செல்ல முயற்சித்த வேளை, ஊழியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து, அர்ஜுன ரணதுங்கவின் மெய்ப்பாதுகாவலர் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் பலியாகியுள்ளார். ஏனைய இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட மெய்ப்பாதுகாவலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இந்நிலையிலேயே குறித்த சம்பவம் தொடர்பில் அர்ஜுன ரணதுங்கவை கைதுசெய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM