இந்தியா விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் உடனான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில்ருந்து இந்திய அணியின் முன்னாள் தலைவர் தோனி ஓய்வு பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் இப்போதைய ஜாம்பவான்களில் ஒருவராக இருக்கும் தோனி. தோனி 93 ரி- 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 1487 ஓட்டங்களை குவித்துள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 20 ஓவர் ரி- 20 போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு பெறுவதாக தேர்வுக்குழுவின் தலைவர் பிரசாத் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும், விக்கெட் காப்பாளர் இடத்துக்கு வீரர்களை நியமிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல், ஆவுஸ்திரேலியாவுக்கு எதிரான ரி- 20 போட்டியிலும் தோனி பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் விக்கெட் காப்பாளராக விளையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரி- 20 போட்டியிலிருந்து தோனி முழுமையாக ஓய்வு பெற்றுவிட்டாரா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள தேர்வுக்குழுத் தலைவர் பிரசாத், முழுமையாக ஓய்வு பெறவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
இதேபோல், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ரி-20 போட்டியில் இருந்து அணி தலைவர் விராட் கோலி ஓய்வு பெறுவதாகவும், அவருக்கு பதிலாக பொறுப்பு தலைவராக ரோஹித் ஷர்மா விளையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM