மலையக மக்களின் கோரிக்கை நியாயமானதாகும் : சம்பள பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வுகாண வேண்டும்: ஜே.வி.பி

Published By: Digital Desk 7

26 Oct, 2018 | 05:37 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

"கம்பனிகளின் பிரச்சினையை பெருந்தோட்ட மக்களின் மீது சுமத்த முற்படக்கூடாது, சம்பள பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகாண அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இன்று பாராளுமன்றத்தில் தெரிவி்த்தார்.

அரச கடன் பெறுகைக்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

"மலையக மக்கள் தங்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாகக்கோரி போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானதாகும்.

நாட்டின் மொத்த தேசிய உற்பத்திக்கு அதிக வருமானம் கிடைப்பது தேயிலையிலாகும். அப்படியான பாரிய பணியை மேற்கொண்டுவரும் அந்த மக்கள் பெறும் ஊதியத்தில் அன்றாட வாழ்க்கையைக்கூட கொண்டு நடத்த முடியாமல் இருக்கிக்கின்றர்.

அத்துடன் அந்த மக்கள் 1000 ரூபா கோரி ஆர்ப்பாட்டாம் செய்தாலும் அவர்களுக்கு 500ரூபாவே அடிப்படைச்சம்பளமாக வழங்கப்படுகின்றது. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

அந்த மக்களை திருப்திப்படுத்தாமல் அவர்களிடமிருந்து பூரண பயனை அரசாங்கம் எதிர்பார்க்க முடியாது. அரசாங்கம் இன்று வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வழி தேடி வருகின்றது. ஆனால் நாட்டின் தேசிய வருமானத்துக்கு பெரும் சக்தியாக இருக்கும் மலையக மக்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்காமல் இருப்பது நியாயமில்லை." என தெரிவித்தார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08