வடமாகாணத்தில் நுண்கடன் செலுத்த முடியாது பெண்கள் தற்கொலை செய்கின்றனர் - விஜித்த ஹேரத்

Published By: Daya

26 Oct, 2018 | 04:37 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

ரூபாவின் வீழ்ச்சியை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. அதனால் மக்கள் வாழ்க்கை சுமையை சமாளித்துக்கொள்ள நுண்கடன் திட்டங்களுக்கு செல்கின்றனர். இதனால் இன்று வடமாகாணத்தில் அநேகமான பெண்கள் கடன் செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொள்கின்றனர் என மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இன்று பாராளுமன்றத்தில் தெரிவி்த்தார்.

அரச கடன்பெறுகைக்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

 குறிப்பாக மட்டக்களப்பு, மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலே நுண்கடன்  வழங்கும் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. இவர்கள் அங்குள்ள பெண்களை இலக்குவைத்து கூடிய வட்டிவீதத்தில் கடன்செலுத்தி வருகின்றனர். ஒரு நிறுவனத்திடம் பெற்ற கடனை செலுத்த மற்றுமொரு நிதி நிறுவனத்திடம் அதிக வட்டிக்கு கடன் பெறுகின்றனர். இவ்வாறு கடன் பெற்று அதனை செலுத்த முடியாத நிலையில் அந்த மாவட்டங்களில் அதிகமான தற்கொலைகள் இடம்பெற்று வருகின்றன. 

அத்துடன் நுண்கடன் திட்டத்தில் அதிக வட்டிக்கு பணம் வழங்கும் நிறுவனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது. அத்துடன் இவ்வாறு கடன்பெற்றவர்களின் வட்டியை அரசாங்கம் பொறுப்பேற்பதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15