நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றி குடும்பக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு இனப்பரம்பலை திட்டமிட்ட வகையில் சீரழிப்பதாக தெரிவித்து மாவட்ட சுகாதார பிரிவுக்கு எதிராக கொழும்பு மனித உரிமை ஆணைக்குழுவில் புதிய தொழிலாளர் முன்னணியின் தலைவர் முரளி ரகுநாதன் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நுவரெலியா மாவட்ட பெருந்தோட்ட பிரதேசங்களுக்கு பொறுப்பான சுகாதார திணைக்களத்தால் குடும்பக்கட்டுப்பாடு முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இச்செயல் இனத்தை அழிப்பதற்கான திட்டமிட்ட செயற்பாடாகவே பார்க்கப்படுகிறது. ஜடேல் என்ற குடும்ப கட்டுப் பாடு நுவரெலியா மாவட்ட சுகாதார அதிகாரி காரியாலயத்தில் தாதியர்கள் மூலம் பெருந்தோட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மலையகத்தில் குழந்தை பிரசவித்துள்ள பெருந்தோட்ட தாய்மாரை மூளைச்சலவை செய்து நீண்ட காலத்திற்கு குழந்தை பிரசவிக்காமல் இருப்பதற்கும் பின்னர் தேவைப்படும் நேரங்களில் ஜடேலை அகற்றிவிட்டு மீண்டும் குழந்தையை பிரசவிக்க முடியும் என்றும் நயவஞ்சகத்தனமாக ஏமாற்றி ஜடேல் பொருத்தப்படுகின்றது.
அதன் பிறகு ஜடேலை பொருத்திக்கொண்ட தாய்மார் அடுத்த குழந்தைக்கு ஜடேலை அகற்றக்கோரி குடும்ப நல தாதியர்கள் மூலம் பொது சுகாதார அதிகாரி காரியாலயத்தை அணுகும்போது தமக்கு ஜடேலை பொருத்துவதற்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாகவும் ஜடேலை அகற்றும் அதிகாரம் தமக்கு இல்லை என்றும் கையை விரித்துவிடுவதாக பல தாய்மார் தெரிவித்துள்ளனர்.
ஆகவே இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய விசாரணைகளை நடத்தி பெருந்தோட்டத் தாய்மாருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM