ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியை மறித்தும் டயர்கள் ஏறித்தும் பொகவந்தலாவ நகரில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் கோரி இன்று காலை 8 மணியில் இருந்து 11மணி வரை பாரிய ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் பொகவந்தலாவ, கொட்டியாகலை, பொகவான, குயினா ஜெப்பல்டன் பி.எஸ் ஜெப்பல்டன் , டி.பி.செல்வகந்தை ஆகிய தோட்டபகுதிகளை சேர்ந்த 2000கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் எங்களுக்கு அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என வழியுறுத்தி கறுப்பு கொடிகளை ஏந்தியும் முன்னெடுப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது தோட்ட தொழிலாளர்களாகிய எங்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கமுடியாவிட்டால் தொழில் அமைச்சர் பதவிவிலக வேண்டும் என கோஷசங்களை எழுப்பியும் ஆர்பாட்டத்தில் ஈடுப்டடனர் .
குறித்த ஆர்ப்பாடத்திற்கு பொகவந்தலாவ வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வர்த்தகர்களும் வாகனசாரதிகளும் கலந்து கொண்டனர். தோட்ட தொழிலாளர்களுக்கு 25நாள் கட்டாய வேலை நாட்கள் மற்றும் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தினால் சுமார் மூன்று மணித்தியாலங்கள் போக்குவரத்து தடைப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. கடந்த முறைபோல் எங்களை ஏமாற்றாது இம்முறை ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்திற்கு மாத்திரம் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடபட வேண்டும் எனவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM