(இரோஷ வேலு)
கொழும்பு நகரில் நேற்று இடம்பெற்ற சுற்றிவளைப்புகளின் போது ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தின் போது பாலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துடுகமுனு மாவத்தை பகுதியில் வைத்து,பாலியகொட வடக்கு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, அங்கொட மற்றும் கொழும்பு 9 பிரதேசங்களைச் சேர்ந்த 25, 28 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு 425 மில்லிகிராம் நிறையுடைய ஐஸ்போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பொரள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டனிஸ்த டி சில்வா மாவத்தையில் வைத்து 31 கிராம் 780 மில்லிகிராம் நிறையுடையு ஹெரோயினுடன் இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரட்டுவல்ல பிரதேசத்தில் வைத்து 5 கிராம் 490 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM