பொலிஸாரின் திடீர் சுற்றி வளைப்பில் கொழும்பில் பெண் உட்பட நால்வர் கைது

Published By: R. Kalaichelvan

25 Oct, 2018 | 05:46 PM
image

(இரோஷ வேலு) 

கொழும்பு நகரில் நேற்று இடம்பெற்ற சுற்றிவளைப்புகளின் போது ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தின் போது பாலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துடுகமுனு மாவத்தை பகுதியில் வைத்து,பாலியகொட வடக்கு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இதன்போது, அங்கொட மற்றும் கொழும்பு 9 பிரதேசங்களைச் சேர்ந்த 25, 28 வயதுடைய இரு  இளைஞர்களே இவ்வாறு 425 மில்லிகிராம் நிறையுடைய ஐஸ்போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

மேலும் பொரள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டனிஸ்த டி சில்வா மாவத்தையில் வைத்து 31 கிராம் 780 மில்லிகிராம் நிறையுடையு ஹெரோயினுடன் இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரட்டுவல்ல பிரதேசத்தில் வைத்து 5 கிராம் 490 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58