அநுராதபுரம் தலாவ பகுதியில் வெடி பொருட்களை வைத்திருந்த இருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையின் அநுராதபுர முகாமிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 23 ஆம் திகதி தலாவ மொரகொட பகுதியிலுள்ள வீடொன்றில் நடாத்திய தேடுதலின் போது ஆண் ஒருவரும் பெண்னொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து இரு கைக்குண்டுகள் 21 டெட்டனேட்டர்கள் மற்றும் 18 வோட்டஜெல் கம்பிகள் 17 துப்பாக்கி ரவைகள் ராம்போவகை கத்திகளையும் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் சந்தேக நபரும் ஆண் சந்தேக நபரும் தலாவ மொரகொட பகுதியை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்பது ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காகவேண்டி சந்தேக நபர்கள் இருவரையும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ள வெடிபொருட்களையும் தலாவ பொலிஸ் நிலையத்தில் அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM