அமைச்சர்களின் மலசலகூடங்கள் கூட மிகத் தரமாகக் காணப்படுகின்றன. ஆனால் தமிழ் மக்களின் வீடுகள் தரம் குறைந்தே இதுவரை இருந்துவருகின்றன. இதில் அவர்கள் எப்படி வாழமுடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.
“தேசிய நல்லிணக்கமும் நாட்டின் எதிர்காலமும்” என்ற தலைப்பில் நேற்று முன்தினம் கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச்சங்க மண்டபத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்இ
கடந்த 68 வருடங்களாக ஆட்சிசெய்த அரசாங்கங்களினால் நாங்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். ஆனால் மாறிமாறி அரசாங்கங்களை ஆட்சிக்குக் கொண்டு வந்தோம். எமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகளும் கிடைக்கவில்லை.
இதைவிட எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எவையும் எட்டப்படவில்லை. இந்த நிலைமை வடக்கிலும் தெற்கிலும் அதிகம் காணப்படுகின்றது.
வடக்கில் யுத்தத்தின் பின் நிலைமை மோசமாகவுள்ளது. எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு கல்விக்கு நல்ல ஓர் அரசாங்கம் உருவாக்கப்படவேண்டும். இன்று மாணவர்கள் கல்வி கற்பதற்கு போதிய வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை.
ஆனால் அமைச்சர்கள்இ பாராளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் சென்று கல்வி கற்றுவிட்டு மீண்டும் நாட்டுக்கு வந்து தேர்தலில் போட்டியிடுகின்றனர். அவர்கள் அமைச்சர்களாகஇ பாராளுமன்ற உறுப்பினர்களாகஇ மாகாணசபை உறுப்பினர்களாக ஆட்சிக்கு வருகின்றனர்.
எமது பிள்ளைகள் அடிப்படைக்கல்வியும் இல்லாது அடிப்படை தொழில்வாய்ப்பும் இல்லாது மிகவும் கஷ்டப்படுகின்றார்கள். வடக்கு மீனவர்களின் பிரச்சினை மிகவும் பாரிய பிரச்சினையாகவுள்ளது. இந்திய மீனவர்களின் துன்புறுத்தல்கள் அதிகம். இதனால் எமது மீனவர்களின் தொழில் பாதிக்கப்படுகின்றது. மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் பலரைக் கடத்திஇ கொலை செய்தார்கள். பொது மக்களின் சொத்துக்களை அழித்தார்கள். யாழ். நூலகத்தை எரித்தார்கள். எமது செயற்பாட்டு உறுப்பினர்களான லலித், குகன் ஆகியோரைக் கடத்தினார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்று இதுவரை தெரியாது. இப்படி தொடர்ந்து ஆட்சிசெய்யும் அரசாங்கங்களினால் நாங்கள் துன்புறுத்தப்பட்டு வருகின்றோம்.
அமைச்சர்களின் மலசலகூடங்கள் கூட மிகத் தரமாக காணப்படுகின்றன. சிலரின் மலசலகூடங்களுக்கு ஏசி கூட பொருத்தியிருக்கிறார்கள். விமல் வீரவன்ஸவின் மாதாந்த மின் கட்டணம் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபா. கெஹெலிய ரம்புக்வெலவின் மாதாந்த வீட்டு மின் கட்டணம் ஒரு இலட்சத்து 19 ஆயிரம் ரூபா.
ஆனால் மீள்குடியேறிய மக்களுக்கு அரசு வழங்கியது பத்து தகரமும்இ 25 ஆயிரம் ரூபா பணமும். இதில் அவர்கள் எப்படி வீடுகளை அமைத்து வாழமுடியும்?
காலத்திற்கு காலம் ஆட்சிக்குவருகின்ற அரசுகள் தங்களுடைய நலன்களையும்இ பொருளாதார பலத்தையும் பெருக்கிக்கொண்டார்களே தவிர மக்களின் பிரச்சி-னைகளை தீர்த்துவைத்ததாக இல்லை.
மேலும் வடக்கிலும் தெற்கிலும் தொடர்ந்தும் ஆட்சியதிகாரத்திற்கு வருகின்றவர்கள் இனவாதம் பேசுகின்றவர்களாகவே இருக்கின்றார்கள். இதை எதிர்த்து நாங்கள் அனை-வரும் ஒன்றிணைந்து கைகோர்த்து எமது உரிமைக்காக போராடுவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM