கசிப்புபோத்தல்களுடன் சென்ற வேன் ; சாரதி கைது

Published By: Vishnu

25 Oct, 2018 | 12:50 PM
image

சட்டவிரோத கசிப்பு போத்தல்களுடன் சென்று கொண்டிருந்த வேன் ஒன்றை மடக்கிப் படித்து அதன் சாரதியைக் கைது செய்துள்ளதாக மாராவில பொலிஸார் தெரிவித்தனர்.

 

நேற்று  இரவு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது பொரலஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். 

பொரலஸ்ஸவிலிருந்து மாராவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுநேரி பிரதேசத்திற்கு வேன் ஒன்றில் கசிப்பு போத்தல்கள் கொண்டு செல்லப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து செயற்பட்ட மாராவில பொலிஸார் சந்தேகத்திற்கிடமான வேனை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் மறைத்து வைத்து வைக்கப்பட்டிருந்த 50 கசிப்பு போத்தல்களைக் கைப்பற்றியதாகத் தெரிவித்தனர். 

குறித்த வேனைக் கைப்பற்றிய போது அதனுள் அதன் சாரதி மாத்திரமே இருந்துள்ளதாகவும்,  பொரலஸ்ஸ பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி செய்யுமிடத்திலிருந்து கசிப்பு போத்தல்களை கட்டுநேரி பிரதேச வீட்டுக்கு எடுத்துச் செல்வதாக அந்நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். 

கைது செய்யப்பட்ட நபரை கைப்பற்றப்பட்ட கசிப்பு போத்தல்களுடன் மாராவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ள மாராவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22