தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டடத்தை ஆக்கிரமித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிநுட்ப துறையைச் சேர்ந்த 15 மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பகிடிவதையில் ஈடுபட்ட குற்றத்திற்காக பல்கலைக்கழகத்திலிருந்து விலக்கப்பட்டுள்ள தகவல் தொழிநுட்ப துறையைச் சேர்ந்த 4 மாணவர்களையும் மீண்டும் சேர்த்துக்கொள்ளுமாறு தொழிநுட்ப துறை மாணவர்கள் கடந்த இரு வார காலமாக நிர்வாக கட்டடத்திற்குள் புகுந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவர்களின் குறித்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக பல்கலைக்கழகத்தின் நிர்வாக மற்றும் நிதி நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
இதன் காரணமான பல்கலைக்கழக நிர்வாக குழுவால் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் மாணவர்களை நிர்வாக கட்டடத்திலிருந்து வெளியேறுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தது.
நீதி மன்ற உத்தரவையும் மீறி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையாலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 15 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகளுக்கு,
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM