ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 10 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இந்திய அணித் தலைவர் விராட் கோலி முறியடித்துள்ளார்.
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்றைய தினம் இந்தியாவின் விசாகப்பட்னத்திலுள்ள வை.எஸ்.ராஜசேகர ரெட்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது.
இதன்போதே விராட் கோலி மேற்கண்ட சாதனையை புரிந்துள்ளார்.
இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. தொடக்க வீரர்களாள ரோஹித் சர்மா 4 ஓட்டத்துடனும், தவான் 29 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேற, ஆடுகளத்திற்கு விராட் கோலி துடுப்பெடுத்தாட நுழைந்தார். விராட் இன்னிங்ஸின் 36 ஓவரின் 3 ஆவது பந்தில் ஒரு ஓட்டத்தை பெற்றவேளையில் ஒருநாள் சர்வதேச அரங்கில் அதிவேகமாக 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். இதற்காக அவருக்கு 205 இன்னிங்ஸுகள் தேவைப்பட்டன.
இந்நிலையில், இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 259 இன்னிங்ஸுகளை எதிர்கொண்டு 10 ஆயிரம் ஓட்டங்களை வேகமாக கடந்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியிந்தார். இதனை விராட் கேலி நேற்று தான் எதிர்கொண்ட 205 ஆவது ஒருநாள் இன்னிங்ஸில் 10 ஆயிரம் ஓட்டங்களை வேகமாக கடந்து சச்சின் டெண்டுல்கரை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்தார்.
அத்துடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 13 ஆவது வீரர் என்ற பெருமையையும் இந்திய அணியின் ஐந்தாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
மேலும் நேற்றைய போட்டியின் போது விராட் கோலி 46 ஓவரின் இரண்டாவது பந்தில் ஆறு ஓட்டத்தை பெற்றபோது இவ் ஆண்டில் (2018 இதுவரை ) ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 1000 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டார்.
29 வயதாகும் இந்திய அணித் தலைவர் விராட் கோலி இதுவரை 73 டெஸ்ட் போட்டிகளில் 6,331 ஓட்டங்களையும், 213 ஒருநாள் போட்டிகளில் 10,076 ஓட்டங்களையும், 62 இருபதுக்கு - 20 போட்டிகளில் 2,102 ஓட்டங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM