மேற்கிந்திய அணியின் சகலதுறை வீரர் டுவைன் பிராவோ சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
35 வயதான பிராவோ 40 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 164 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 66 ரி20 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையிலேயே ஓய்வை அறிவித்துள்ளார்.
பிராவோ ஒருநாள் அணியி;ன் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்
அனைத்து வகை போட்டிகளிலிருந்தும் நான் உத்தியோகபூர்வமாக ஓய்வுபெற்றுள்ளேன் என்பதை கிரிக்கெட் உலகிற்கு அறிவிக்க விரும்;புகின்றேன் என பிராவோ அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
14 வருடத்திற்கு முன்னர் நான் மேற்கிந்திய அணிக்காக எனது முதல்போட்டியை ஆடிய தருணம் நினைவிலுள்ளது என பிராவோ குறிப்பிட்டுள்ளார்.
2004 யூலை மாதம் லோர்ட்ஸ் மைதானத்தில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னர் மேற்கிந்திய அணியின் தொப்பியை பெற்றுக்கொண்ட தருணம் எனக்கு நினைவிலிருக்கின்றது எனவும் பிராவோ தெரிவித்துள்ளார்.
அவ்வேளை என்னிடம் காணப்பட்ட ஆர்வம் உற்சாகம் வேட்கை ஆகியவற்றை நான் எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதிலும் தக்கவைத்துக்கொண்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நான் எனது முன்னைய தலைமுறையினரை பின்பற்றி அடுத்த தலைமுறைக்கு வழிவிடுவதற்காக ஓய்வு பெறதீர்மானித்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM