ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் பிரதான விகாரை ஒன்றை மையப்படுத்தி ஜனாதிபதி தலைமையில் இடம்பெறும் சதஹம் யாத்ரா சமய உரைத் தொடரின் 43 வது சமய உரை நிகழ்ச்சி இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள அரச மரத்திற்கு அருகில் இடம்பெற்றது.
சங்கைக்குரிய மாத்தரை மஹிந்த தேரரினால் இன்றைய சமய உரை நிகழ்த்தப்பட்டதுடன் ஜனாதிபதி மாளிகையில் உள்ள அரச மரத்திற்கு அருகில் இடம்பெற்ற முதலாவது சமய உரை நிகழ்ச்சி இதுவாகும்.
இதன்போது ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு கடந்த மாதம் இந்த அரச மரத்தை சுற்றி தங்க வேலி ஒன்று அமைக்கப்பட்டதுடன், புத்தபெருமானின் சிலை ஒன்றும் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.
இன்று காலை இங்கு வருகை தந்த ஜனாதிபதி, சமயக் கிரியைகளில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டதுடன், சமய உரையையும் செவிமடுத்தார்.
மேலும் ஜயந்தி சிறிசேன, அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன உள்ளிட்ட ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், பணிக்குழாமினர் மற்றும் பௌத்த அறநெறி பாடசாலை மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM