அச்சக கூட்டுத்தாபன காணியை இராணுவத்துக்கு வழங்க முயற்சி

Published By: Daya

24 Oct, 2018 | 03:53 PM
image

மட்டக்களப்பு கும்புறு மூலையில் அரச அச்சக் கூட்டுத்தாபனம் அமைக்கப்பட்ட காணியை இராணுவத்துக்கு வழங்கும் முயற்சியை உடன் கைவிடுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பாக  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமாருக்கு அனுப்பிவைத்துள்ள கடித்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  

அந்த கடிதத்தில் அவர் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள, கும்புறுமூலை முச்சந்தியின் அருகில் முன்பு தாபிக்கப்பட்டு யுத்த சூழலினால் பாதிக்கப்பட்ட அரச அச்சகக் கூட்டுத்தாபனம் அமைக்கப்பட்ட காணியை, கிழக்கு மாகாண காணி ஆணையாளர் இராணுவத்திற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அறிகின்றேன்.

இக்காணியில் அரச அச்சகக் கூட்டுத்தாபனம் உட்பட தொழில் பேட்டைகள் எதிர்காலத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாலும், இக் காணியிலோ அல்லது இதற்கு அருகாமையிலோ இராணுவமுகாம் அமைக்கும் திட்டத்திற்கு காணியை வழங்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். பதிலையும், நடவடிக்கைகளையும் கோருகிறேன். என குறிப்பிடப்பட் கடித்தின் பிரதிகள் ஜனாதிபதி, பிரதமர் ஆளுநர், மாகாண காணி ஆணையாளர் கோறளைப்பற்று பிரதேச செயலாளர், கிரான் பிரதேச செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17