2020 ஆம் ஆண்டில் ஜப்பானில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றும் இலங்கை அணியினருக்கும் தூதுக் குழுவினருக்கும் ஜப்பானின் சீபா பிராந்தியந்தின் சம்மு நகர சபை அனுசரணை வழங்கியுள்ளது.
2020 ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றும் இலங்கை வீர, வீராங்கனைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்கவும் அவர்களின் பயிற்சி நடவடிக்கைகளுக்காக தனியான மைதான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் இதன்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு ஜப்பான் மக்களிடையே இலங்கையின் கலாசாரம் மற்றும் வரலாறு தொடர்பான புரிந்துணர்வை ஏற்படுத்தும் செயற்திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன் இதற்கான அனுசரணை வழங்குதல் தொடர்பான ஒப்பந்தமும் விளையாட்டுத் துறை அமைச்சிற்கும் சம்மு நகர சபைக்குமிடையே கைச்சாத்திடப்பட்டுள்ளது.
நேற்யை தினம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்த சம்மு நகர சபையின் நகர பிதா மட்சுசிடா ஹிராக்கி (Matsushita Hiroaki) உள்ளிட்ட பிரதிநிதிகள் அனுசரணை வழங்குதல் தொடர்பாக உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு தெரிவித்தனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர சங்க நாயக்கர் எத்துல்கோட்டே மஹிந்தாராமாதிபதி, இலங்கை நிப்போன் கல்வி மற்றும் கலாசார மையத்தின் பொதுச் செயலாளர் வண. மீகஹவத்தே சந்திரசிறி நாயக்க தேரர் மற்றும் தென் மாகாண பிரதான சங்க நாயக்கர் எல்பிட்டிய விகாரமஹாதேவி பிரிவெனாதிபதி இலங்கை நிப்போன் கல்வி மற்றும் கலாசார மையத்தின் பிரதி செயலாளர் வண. வெலிபிட்டிய சீவலி நாயக்க தேரர் மற்றும் தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் மெக்ஸ்வல் டி சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM